Wednesday, March 12, 2014

ஐயப்பன் கோவிலின் பதினெட்டு படிகளின் தாத்பரியம்

ஐயப்பன் கோவிலின் பதினெட்டு படிகளின் தாத்பரியம்
--------------------------------------------------------------------------
முதல் படி:
விஷாத யோகம் .பிறப்பு நிலைய...ற்றது.நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய , பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும்.இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல படி.
இரண்டாம் படி:
சாங்கிய யோகம்.பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.
மூன்றாவது படி:
கர்ம யோகம்.உபதேசம் பெற்றால் போதுமா?மனம் பக்குவம் அடைய வேண்டாமா?பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.
நான்காம் படி:
ஞான கர்ம சந்நியாச யோகம்.பாவம்,புண்ணியங்கள் பற்றிக் கூட கவலைப் படாமல் எதன் மீதும் பற்று இல்லாமல் ,பரமனை அடையும் வழியில் முன்னேறுவதும் நான்காம் படி.
ஐந்தாம் படி:
நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் ,தான தர்மங்கள் செய்வது ஐந்தாம் படி.
ஆறாம் படி:
தியான யோகம்.கடவுளை அடியாய் புலனடக்கம் முக்கியம்.மெய்,வாய்,கண்,மூக்கு,செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் பொய் விடக்கூடாது இதுவே ஆறாவது படி.
ஏழாம் படி:
ஞானம் ,இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான்.எல்லாமே கடவுள் தான் என உணர்த்துவது ஏழாவது படி.
எட்டாம் படி:
அட்சர பிரம்ம யோகம்,எந்த நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவது படி.
ஒன்பதாவது படி:
ராஜவித்யா,ராஜ குஹ்ய யோகம் .கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை.சமூகத் தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதும்தான் உண்மையான பக்தி,உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது ஒன்பதாவது படி.
பத்தாம் படி:
விபூதி யோகம்.அழகு ,அறிவு ,ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.
பதினொன்றாம் படி:
விஸ்வரூப தரிசன யோகம் ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனபக்குவத்தை வளர்த்துக் கொள்வது பதினொன்றாம் படி.
பன்னிரெண்டாம் படி:
பக்தி ,யோகம் .இன்பம் துன்பம் ,விருப்பு வெறுப்பு,எழிய பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரெண்டாம் படி.
பதிமூன்றாம் படி:
ஷேத்ர விபாக யோகம்.எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்பதிமூன்றாம் படி.
பதினான்காம் படி:
குணத்ர விபாக யோகம்.பிறப்பு ,இறப்பு ,மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி ,இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.
பதினைந்தாம் படி:
தெயவாசுர விபாக யோகம்.தீய குணங்களை ஒழித்து,நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.
பதினாறாம் படி:
சம்பத் விபாக யோகம்.இறைவன் படைப்பில் எல்லோரும் சாம் என்று உணர்ந்து அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.
பதினேழாம் படி:
சிரித்தாத்ரய விபாக யோகம்.சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரபிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.
பதினெட்டாம் படி:
மோட்ச சன்யாச யோகம்.யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல்.உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி.
சத்தியம் நிறைந்த இந்த பொன் பதினெட்டுப் படிகளையும் கடந்து வந்தால் ,நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிட்சனம் தருவார்.நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

No comments:

Post a Comment