Thursday, May 29, 2014

அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் 10 சதவீதம் தானம் தர்மம் செய்தாலே, அது 10 மடங்கு பெருகி உங்களுக்கு 100 சதவீத புண் ணியத்தை தேடித்தரும்

பொருளை தேடிக்கொள்வதைப் போல புண்ணியத்தையும் தேடிக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சரியான சந்தர்ப்பமாக அட்சய திருதியை வருகிறது. நீங்கள் மனம் உவந்து ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, அதன் புண்ணியத்தை உங்களுக்குக் கொடுக்கும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மற்ற நாட்களில் நீங்கள் 10 சதவீதம் தான, தர்மம் செய்தால், உங்களுக்கு 10 சதவீத புண்ணிய பலனே கிடைக்கும். ஆனால் அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் 10 சதவீதம் தானம் தர்மம் செய்தாலே, அது 10 மடங்கு பெருகி உங்களுக்கு 100 சதவீத புண் ணியத்தை தேடித்தரும்.

இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். எனவே வரும் 2-ந்தேதி காலை, மாலை இரு நேரமும் மறக்காமல் லட்சுமி பூஜை செய்யுங்கள்.

மகாலட்சுமி படம் முன்பு நெய்தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். நிச்சயம் அலைமகள் உங்கள் வீட்டில் அவதரிப்பாள்

No comments:

Post a Comment