Thursday, May 29, 2014

சித்ரா பவுர்ணமி அன்று காலையில் பூஜை செய்வது எப்படி?

சித்ரா பவுர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து, அருகில் ஏடும், எழுத்தாணியும் (நோட்டு - பேனா) வைத்து, ஒரு காகிதத்தில் சித்ர குப்தன் படியளப்பு என்று எழுதி வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை ஒரு வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும்.

படையலுடன், மாங்காய், தேங்காய் மற்றும் பல வகை காய்கறிளையும், பருப்புகளையும், (இருந்தால்) தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைத்திட வேண்டும். தொடர்ந்து, தேங்காய் உடைத்து, தீப ஆராதனை காண்பித்து வழிபடுதல் வேண்டும். அதன் பிறகு பொங்கலை எல்லோருக்கும் தானமாக கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment