Thursday, July 31, 2014

ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக் கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண் டவனின் ரத்தத்தில் கலந்துவிடும்

இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து: “நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது!”
பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, உத்திரியான புண்ய காலத்தை எதிர்நோக்கிக்கி, காத் திருந்தார். அவர் மரணமடைவதற்கு முன் , அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார் . தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலி யுடன் பிதாமகரிடம் சென்றார் .
பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி “தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்” என்று கேட்க , பாஞ்சாலி மட்டும் பல மாகச் சிரித்தாள் . அதில் கேலி கலந் திருப்பதை உணர்ந்த தர்மர், “நம் தந் தைக்கு இணையான பிதா மகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறா ய் ? ” என்று கடுமையாகக்கேட்டார்.
“துரியோதனனின் சபையில் துச்சாத னன் என்னை மானபங்கம் செய்த போது, கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்? தர்மம் தெரிந்த பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண் டிருந்தாரே தவிர , துரியோ தனனை எதிர்த்து ஒரு வார்த்தையா வது பேசி னாரா ? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி கேட்கிறீர் களே என்று நினைக்கும் போது சிரிக்காமல் என்ன செய்வது ? ” என்று சொல்ல, பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதி யாக இருந்தார்கள் .
அப்பொழுது பீஷ்மர் பேசினார். “பாஞ்சாலி சொன்னது முற்றிலும் உண்மை. அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண் டும். அப்போதுதான் உங்களுக்கும் , உலகத்துக்கும் உண்மை என்ன வென்று தெரியும் .
துரியோதனன், அன்னமிடுவதில் உய ர்ந்தவன் . எந்த நேரத்தில் யார் வந்தா லும் அவர்கள் வயிறு நிறைய உபசரி ப்பான். ஆனால், அவன்செய்யும் அன் னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல . சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவி ட்டு, அவர்களை தன் காரியங்களுக் கு பயன்படுத்திக் கொள்வான். உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள் . இத ற்கு சல்லியன் ஓர் உதாரணம் .
” ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக் கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண் டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதா ல் எனக்குள் அவனது தீய குணமே குடி கொண்டு விட்டது . அத னால்தான் பாஞ் சாலியை மானபங்கம் செய்தபோது எது வும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன் .”
” ஆனால் இப்போது , பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கை யில் படுத்த பிறகு எனது உடலிலி ருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளி யேறி விட்டது. அத்தோடு தீயசக்தி களும் வெளியேறிவிட்டன . இப்போ து என் உடலில் தூய்மையான ஆன் மா மட்டும்தான் இருக் கிறது. எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ள வன் . கேளுங்கள் ” என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய் தார் .
அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள் , சாதுக்கள், பண்டிதர்கள் பரான்ன த்தை அதாவது வெளியில் சாப்பிடு வதை விரும்ப மாட்டார்கள்.

No comments:

Post a Comment