Thursday, July 31, 2014

தருமருக்கு ‘தருமத்தின் இலக்கணத்தை’ உரைத்த பிதாமகன் பீஷ் மர்

தருமருக்கு ‘தருமத்தின் இலக்கணத்தை’ உரைத்த பிதாமகன் பீஷ் மர்! – இது தருமருக்கு மட்டுமல்ல நமக்கும் தான்
தருமத்தின் இலக்கணத்தை பீஷ்மர், இந்திர னுக்கும்,கிளிக்கும் நடந் த உரையாடலாக அமைந்த ஒரு கதையாக தருமருக்கு உரை த்தார்..
‘தருமா! காசி தேசத்தில் ஒரு வேடன் விஷ ம் தோய்ந்த அம்பையும், வில்லையும் எடு த்துக் கொண்டு மான் வேட்டைக்குக் காடு நோக்கிச் சென்றான்.மான் கூட்டம் நிறைந் திருப்பதைக் கண்டு மகிழ்ந்த வேடன் உற் சாகத்துடன் அம்பைச் செலுத்தினான்.அது குறி தவறி ஒரு பெரிய ஆலமரத்தில் செ ன்று பாய்ந்தது.விஷம் தோய்ந்த அம்பான தால் அந்த மரம் பட்டுப் போனது.
மரம் அப்படியான போதும் அந்த மரத்தின்
பொந்துகளில் வசித்து வந்த ஒரு கிளி அந்த இடத்தை விட்டு அகல வில்லை. இரை எடுக்க வில்லை. வெளி யே போகவில்லை.தான் வசித்து வந்த மரத்திற்கு இப்ப டியானதே ..என வருந்தியது.
கிளியின் அன்பைக் கண்டு இந்திரன் வியப்புற்றான். பற வை இனமா ய் இருந்தும் மரத்திடம் இப்படி ஒரு அன்பா? என எண்ணி,கிளி இருந்த மரம் நோக்கி வந்தான்.. அவன் கிளியிடம்’இந்த மரத்தைவி ட்டு ஏன் அகலாமல் இருக்கிறாய்?’ என்றான்.
இந்திரன் இப்படிக் கேட்டதும் கிளி அவனை வணங்கி..’ தேவேந்திரா! உன்னை என் தவத்தால் அறிந்து கொண் டேன். உன் வரவு நல் வரவாகட்டும்’ என்றது.
தேவேந்திரன் கிளியிடம், ‘இலைகளும், கனிகளும், கிளைகளும் இன்றி பட்டுப்போன மரத்தில் ..நீ மட் டும் இருந்து ஏன் காவல் காக்கிறாய் . . இக்காட்டில் உனக்கு வேறு மரமா.. இல்லை?’எனக் கேட்டான்.
இந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட கிளி, மிகுந்த துயர த்துடன்’ நற்குணங்களின் இருப்பிடமான இம்மரத்தில் நான் பிறந்தேன். இளமையில் நன்கு பாதுகாக்கப்பட் டேன். பகைவ ர்களும் என்னை ஒன்றும் செய்யவில்லை. தயை, பக்தி இவற் றால் வேறு இடம் நாடாமல் இருக்கும் எனது பிறவியை ஏன் பயனற்றதாக மாற்ற நினைக்கிறாய்?நமக்கு உதவு செய்தவரி டத்தில் தயையுடன் நடந்து கொள்வது தானே தருமத்தின் இலக்கணம். தயை யே எல்லோருக்கும் திருப்தியை அளிப்ப து.தேவர்கள் அனைவரும் தருமத்தின் சிறப்பைப் பற்றி உன்னிடம் அல்லவா கேட்க வருகிறார்கள்.. அதனால் அன் றோ தேவர்களுக்கு அதிபதியாய் நீ இரு க்கிறாய் ..தருமம் அறிந்த நீ, நீண்ட நாட் களாக நான் இருந்த மரத்தை விட்டுவிட ச் சொல்லலாமா?ஆதரித்தவர் நல்ல நிலையில் இருந்த போது அடுத்துப் பிழை ததவன் அவர் கெட்டநிலைக்கு வந்தபோது எப்படி பிரிவது?’ என்று கூறி யது.
கிளியின் சொல் கேட்டு, இந்திரன் மகிழ் ந்தான். ஞானிபோல பேசிய அக்கிளியி டம் மிக்க மரியாதை ஏற்பட்டது. அதனி டம், “நீ வேண்டும் வரம் கேள்.. தருகி றேன்’ என்றான்.
உடன் கிளி.’பட்டுப்போன இம்மரம் முன் போல பூத்துக்குலுங்க வேண்டும். . இது வே நான் வேண்டும் வரம்’என்றது.
உடன் இந்திரனும் அம்மரத்தின்மீது அமி ழ்தத்தைப்பொழிந்தான். முன்னை விட பன்மடங்கு பொலிவுடனும், கம் பீரத்துடனும் ஓங்கி வளர்ந்து நின்றது மரம்.
‘தருமரே! கிளியின் பக்தியால் அம் மரம் பழைய நிலையை விட சிற ந்து விளங்கியது என்பதுடன் அல்லாது, அக்கிளியும் ஆயுள் முடிவி ல் இந்திர லோகம் அடைந்தது. பக்தியுள்ளவ னைச் சார்ந்தவர் மரம் போல நற்பய னைப் பெறுவர் என உணர்வாயாக’ என்றார் பீஷ்மர்.

No comments:

Post a Comment