Sunday, August 24, 2014

ஆந்தைகள் அலறல் சப்தத்தின் பலன்}

{ஆந்தைகள் அலறல் சப்தத்தின் பலன்} 
1/ சப்தம் முறை அலறல் - மனதுக்க செய்தி (அ) மரண சாவு செய்தி 2/ சப்தம் முறை அலறல்- வெற்றி ஜெயம் விஜயம் (சந்தோஷம்) 3/ சப்தம் முறை அலறல்- மகிழ்ச்சி உல்லாச உடலுறவிலும் 4/ சப்தம் முறை அலறல்- அடிதடி சண்டை -கலகம் 5/ சப்தம் முறை அலறல்- தேய்வ வழி பிரயாணம் 6/ சப்தம் முறை அலறல்- நண்பர்கள் விருந்தினர் வருகை
7/ சப்தம் முறை அலறல்- தனம் வரவு பணம்
8/ சப்தம் முறை அலறல்- துன்பம் அல்லது துக்கம் 9/ சப்தம் முறை அலறல்- வாழ்க்கை-முன்னேற்றம்
{வலதுகால்விரல் இடதுகால்விரல் இடறல்பலன்} பெருவிரல் கால் வலது தட்டினால் -அமுதசுக போஜனம் கிடைக்கும்
2வது வலது விரல் தட்டினால் - புதியபட்டு ஆடை அணிதல்
நடுவிரல் வலது தட்டினால் - தணம் வரவு
4வது விரல் வலது தட்டினால் -வியாதினால் துன்பம்
சிறு விரல் வலது தட்டினால் - மரணச் செய்தி

பெருவிரல் இடதுகால் தட்டினால் -மரணசாவுச் செய்தி
2 வது விரல் இடதுகால் தட்டினால் - வியாதினால் நோயினால் துன்பம்
நடுவிரல் இடதுகால் தட்டினால் -தணப் பிராத்தி வரவு
4 வது விரல் இடதுகால் தட்டினால் -தன கன புதிய ஆபரண ஆடை வரவு
சிறுவிரல் இடதுகால் தட்டினால் - அமுதசுகபோஜனம்
பயநத்தின் போதோ பொதுவாக புறபபடும் போது எது இருகால்களில் இடறினாலும் உட்கார்ந்து சற்று சிறிது நீர் அருந்திவிட்டு அதன் பிறகு புறப்படலாம் இடறும் போது ஆசுவாசப்படுத்திக் கொள்ளாமல் உடனே சென்றால் பிரச்னைகள் ஏதேனும் வரும் என்ற நம்பிக்கை அநேகபேரிடம் உள்ளது
{ஆண் பெண் தும்மள் சகுனம்}
எண்ணம் ஏதேனும் சிந்தனைகளை ஆண் செயல் படுத்தும் போது பெண் தும்மினாலும்,பெண் எண்ணும் போது ஆண் தும்மினாலும் நல்லது ஏற்படும் .ஆண் நினைக்கும் போது ஆண் தும்மினாலும் பெண் நினைத்து எண்ணும்போது பெண் தும்மினாலும் நல்லது நடக்காது பொதுவாக ஒற்றைத் தும்மல் ஆகாது இரட்டைத் தும்மல் நல்லது தொடர்ச்சியான தும்மலுக்கு பலன் இல்லை தும்முவதை ஒரு சகுனமாகவே எண்ணுவதால்தான் திருமணத்தில் மாங்கல்யதாரணம் எனும் தாலிகட்டும்போது அபசகுணமாக எவரேனும் தும்மினாலும் அது கேட்டுவிடக் கூடாது என்பதற்காக கெட்டிமேளம் என்று மேளத்தை பலமாகத் தட்டியும் நாதஸ்வரத்தை ஊதி பலமாக ஓசையெழுப்பி பலத்த மங்கள வாத்திய பலத்த ழுழக்கத்தில் தும்மல் ஓசையை அடக்கிவிடுகின்றார்கள் திருமணத்தில் தாலிகட்டும்போது ஒலிக்கும் கெட்டிமேளம் தாத்பரியமாகும்

No comments:

Post a Comment