Monday, August 25, 2014

தேங்காய் சகுணம்


{தேங்காய் சகுணம்} பொதுவாக சாதாரணமாகவே பூஜைக்கு தேங்காய் உடைக்கும்போது தேங்காய் இருபுறமும் பிசிர்கள் இல்லாமல் சம்மாக உடைந்தால் சுப சகுனமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது எந்த ஒருகாரியம் செய்யத் துவங்குமுன் குளித்து சுத்தமாக தேவதை முன்பாக ஒரு தேங்காயை உடைத்தால் அந்த தேங்காய் சரிசம்மாக பிசிறில்லாமல் உடைந்தால் அந்த காரியம் விக்கினம் இல்லாமல் நடக்கும் அன்ற தேங்காய் உடைக்கும்போது இரண்டுபக்கமும் சரிசமமாக உடைந்தால் காரிய வெற்றியாகும் சுப சகுனமாகும்,கண் உள்ள பக்கம் பெரியதாக உடைந்தால் செல்வமும் மகிழ்ச்சியும் ஏற்படும் கண் உள்ளபகுதி சிறியதாக உடைந்தால் காரியத்தில் விக்கினங்கள் ஏற்படும் நீளவாக்கில் உடைந்தால் ஆகாது துயரம் துன்பம் கெடுதல் ஏற்படும் (3)சில்லாக உடைந்தால் பகையாகும் 4-சில்லாக உடைந்தால் குடும்பத்தலைவர்க்கு ஆகாது 5-சில்லாக உடைந்தால் சண்டை கலகம் வரும் பல சில்லுகளாக உடைந்தால் துன்பங்கள் ஏற்படும் விடைலை தேங்காய் உடைக்கும் போது மட்டும் அதிக சில்லுகளாக உடைவது நல்லது சில்லுகள் தெறிப்பது போல் துனபங்களும் தெறித்து சிதறி நன்மையை ஏற்படுத்தும் எனவே சூரைத் தேங்காய் உடைப்பதும் சாம்பல் பூசனி உடைப்பதும் பல சில்லுகளாவது தான் நல்லது தேங்காய் உடையாமல் ஓடு கழன்று வந்தால் ஆகாது கவலையும் பழியும் வந்து சேரும் மூடிபாகம் இரண்டாக உடைந்தால் சேதம் ஏற்படும் குடும்பம் பிரியும் கையிலிருந்து நழவிச் சென்றால் நோயால் துன்பம் உண்டாகும் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் துன்பமும் அவமானமும் பழியும் பிரிவினையும் ஏற்படும் தேங்காய் உடைக்கும் விஷயத்தில் கவணம் தேவை சகுனம் உள்ளது

No comments:

Post a Comment