Monday, September 15, 2014

சுயம்புவை வணங்கலாம்!


கோயிலில் கருவறையில் மூலவரும், அதன் அருகில் உற்சவரும் எழுந்தருளியிருப்பர். திருவிழா காலத்தில் உற்ஸவர் மட்டும் திருவீதி எழுந்தருள்வது வழக்கம். சுவாமி தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு அருள்புரிவதற்காக வீதியுலா நடக்கிறது. அப்போது <உற்ஸவர், மூலவரின் அனைத்து சக்தியையும் தன்னோடு எடுத்து வருவதாக ஐதீகம். அந்த சமயத்தில் மூலவரை தரிசித்தல், அர்ச்சித்தல், வலம் வருதல் போன்ற எந்த வழிபாட்டையும் மேற்கொள்வது கூடாது என்கிறது சிவயோகி ஸம்வாதம். ஆனால், சுவாமி சுயம்பு மூர்த்தியாக (தானாக தோன்றியது) எழுந்தருளியுள்ள கோயில்களில் மட்டும் மூலவரைத் தரிசிக்கலாம். ஆனால், அர்ச்சனை செய்யவோ, வலம் வரவோ கூடாது

No comments:

Post a Comment