Saturday, September 20, 2014

ஐயப்பனின் கால்களில் துண்டு இருப்பது ஏன்

ஐயப்பனின் கால்களில் துண்டு இருப்பது ஏன்
சபரிமலை செல்லும் பக்தர்கள் ஐயப்பனின் இரு கால்களிலும் முட்டுக்கு கீழ் துண்டு கட்டியிருப்பதைக் காணலாம். அதற்கு ஒரு காரணம் உண்டு. ஒரு முறை ஐயப்பனைக்காண அவரது தந்தையான பந்தளம் மன்னர் ராஜசேகரன் சென்றார். தந்தையைப் பார்த்ததும் தவக்கோலத்திலிருந்த ஐயப்பன் எழுந்திருக்க முயன்றான். அப்போது இறைவனான ஐயப்பன் தனக்கு மரியாதை செய்வதற்காக எழுந்திருக்க கூடாது என கூறி மன்னர் தனது தோளில் போட்டிருந்த அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி தூக்கி வீசினார். அப்போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பனின் காலை சுற்றிக் கொண்டது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்று எழுந்திருப்பது போல தோன்றும்

No comments:

Post a Comment