Wednesday, September 17, 2014

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் ...

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் ...
மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுகிறார்கள்.
மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்?
ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள்?
எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன? காரணம், பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான்.
மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில் இடது கால் கைகளைவிட, வலது கால் கைகள் பலம் வாய்ந்தவை.
`சக்தியோடு வாழ’ நிரந்தரமாக எதிலும் `வலப்புறமாக வருவது நன்று’ என இந்துக்கள் நம்பினார்கள்; நம்புகிறார்கள்.
`வலம்’ என்பது `நாம் வலிமையடைவோம்’ என்றும் பொருள் தருகிறது.
`வலியோம், வல்லோம், வல்லம், வலம்’
இந்த நான்கு வார்த்தைகளும் ஒரே பொருள் ..உடையவை.
மணமக்களின் முதலிரவை `சாந்தி முகூர்த்தம்’ என்பார்கள்.
“காதலில் துடித்துக் கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்குச் சாந்தியடைகிறது” என்பது அதன் பொருள்.
திருமணத்தின் போது `அக்கினி’ வளர்க்கிறார்களே, ஏன்?
அவர்களது எதிர்கால ஒழுக்கத்தில் `அக்கினி’ சாட்சியாகிறான்.
அவர்கள் வழி தவறினால் அந்த அக்கினி அவர்கள் உள்ளத்தை எரிக்கிறான்; அவர்களைத் தண்டிக்கிறான்.
அதனால்தான், கற்பு நிறைந்த பெண்ணைக் `கற்புக்கனல்’ என்கிறார்கள்.
அம்மி மிதிக்கிறார்களே, ஏன்?
எல்லாக் குடும்பங்களுக்கும் இன்றியமையாதது அம்மி. அந்த அம்மியின் மீது காலை வைப்பது, `என் கால் உன்மீதுதான் இருக்கும்; உன்னைத் தாண்டிப் போகாது’ என்று சத்தியம் செய்வதே.
`படி தாண்டாத பத்தினி’ என்பது வழக்கு.
`படியைத் தாண்டமாட்டேன்’ என்பதே அம்மியின் மீது சொல்லப்படுவது.
அருந்ததியைப் பார்ப்பது ஏன்?
`அருந்ததியைப் போல் நிரந்தரக் கற்பு நட்சத்திரமாக நின்று மின்னுவேன்’ என்று ஆணையிடுவதே.
`பால் பழம்’ சாப்பிடுவது ஏன்?
அது `பாலோடு சேர்ந்த பழம்போலச் சுவை பெறுவோம்’ என்று கூறுவதே.
பூ மணம் இடுவது ஏன்?
`பூ மணம் போலப் புகழ் மணம் பரப்புவோம்’ என்றே!
மாங்கல்யத்தில் மூன்று முடிச்சுப் போடுவதேன்?
ஒரு முடிச்சு கணவனுக்கு அடங்கியவளென்றும், மறு முடிச்சு தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவளென்றும், மூன்றாவது முடிச்சு தெய்வத்துக்குப் பயந்தவளென்றும் உறுதி கொள்ளவைப்பதே.
ஆம்; பெண்ணிற்குத் `தற்காப்பு’ வேண்டும்; தாய் தந்தை `காப்பு’ வேண்டும்; தெய்வத்தின் `காப்பு’ வேண்டும்.
இந்தக் காப்புகளுக்காகவே கையில் `காப்பு’ அணியப்படுகிறது.
`அவளைக் காப்பேன்’ என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் `காப்பு’க் கட்டப்படுகிறது...
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மத

No comments:

Post a Comment