Saturday, January 31, 2015

சுவாமி ஏன் ஒற்றைக்கால் தூக்கி தாண்டவம் புரிகிறார்?

ஆடிய பாதம்
சுவாமி ஏன் ஒற்றைக்கால் தூக்கி தாண்டவம் புரிகிறார்?
ஆதியில் இந்த பூமியைப் படைத்த இறைவன் அதை இயக்கச் செய்கிறார்..அந்த இயக்கத்திலிருந்து பிறக்கப்பட்டதே பருவங்கள் காலங்கள் உயிரினங்கள்...!
பிறக்கப்பட்ட உயிரினங்கள் ஆதியில் பூமியைப் பார்த்து மலைக்கத் தொடங்கியது..வியக்கத் தொடங்கியது..!கண்ணில் பட்டதையெல்லாம் பார்த்து இந்த மலை இவ்வளவு உறுதியாக உள்ளதே இதுதான் இறைவனோ?இந்த கடல்? வெப்பம் ?என மலைக்க மலைக்க மாயா சக்திகளின் பிடிகளில் மாட்டி சிக்கித் தவிக்க ஆரம்பித்தது...!அப்போது இறைவன் இவர்கள் இப்படி சிக்கித் தவிக்கிறார்களே என எண்ணி அதை போக்கும் பொருட்டு இந்த உலகம் எப்படி இயங்குகிறது..என்பதை ஆடிக்காட்டி அப்படியே உறைந்த திருமேனி தில்லை கூத்தப்பெருமான் திருமேனி ..நாம் என்னதான் ஒரு இடத்தில் நிலையாக நின்றாலும் நிற்பதைப்போல் தோன்றினாலும்...ஒருகோணத்தில் பூமி சுத்துகிறபோது நாமும் சுற்றிக்கொண்டு அசைந்த வண்ணமே இருப்பதுதான் நிதர்சனமான உண்மை..இயக்கத்தில்தான் இறைவன் வெளிப்படுகிறார்.. நாம் அறிந்தாலும் அறியாமல் இருந்தாலும் உணர்ந்தாலும் உணராமல் இருந்தாலும் இறைவன் நீக்கமற நிறைந்து ஒவ்வொன்றையும் அணுஅணுவாக இயக்கிக் கொண்டேயிருக்கிறார்..!
இந்த இயற்கை மட்டும் இறைவன் கிடையது ..இந்த இயற்கையை இயக்குபவன் இறைவன்..
நாம் நமது புலன்களைக் கொண்டு அசைவுகளை மேற்க்கொண்டு வாழ்கிறோம்..உட்புறம் உங்கள் உறுப்புகளை நீங்களா சுயமாக இயக்குகிறீர்கள்?எவ்வாறு சுயமாக இயங்குகிறது?இதயம் நுறையீரல் மூளை என எத்தனை உறுப்புகள் நமது கட்டுபாடில்லாமல் நமக்காக இயங்குகிறது?அதைக் கட்டுக்குள் வைத்திருப்பவர் யார்?அவர்தான் எல்லாம் வல்ல சிவபெருமான்...
எந்த ஒருபிறப்பும் இறைவன் கிடையாது..பிறப்பை தன் படைப்புகளாய் இயக்குபவன் இறைவன்...
அதை ஆடிக்காட்டி அப்படியே உறைந்ததே தில்லை கூத்தப்பெருமான் திருமேனி..
அவர்திருவடியை திருப்பாதத்தில் தொடங்கி அதிலிருந்து தொடர்ந்து திருமேனியை பார்க்கும் போது அந்த திருமேனி நம்முள் உணர்வாகப் பதியும் ..
இங்கு புறத்தின் மூலம் அவரைப்பார்த்தாலும் திருமேனித்தீண்டினாலும் அது உணரும் இடம் புறத்திலோ? புலன்களிலோ? அல்ல ..
நம் கட்டுப்பாடின்றி நமக்காக இயங்கும் நம் நெஞ்சத்தில் தான் இறைவன் உணரப்படுகிறார்...
கங்கையில் தரிசித்தாலும் குமரியில் தரிசித்தாலும் உணருமிடம் நம் உள்மே..
இங்கு நாமாக எதையும் செய்கிறோம் என்ற எண்ணம் வரும்போது நம்மைவிட இன்னொருவன் சிறப்பாக செய்கிறான் என்ற பொறாமை அச்சம் போன்ற மாயை உணர்வுகள் பற்றிக்கொண்டு துன்பத்திற்கு காரணமாக அமைகின்றன..!
இறைவன் நம் உள்ளேதான் இயக்கமாக ஆடிக்கொண்டிருகார் என்னுடைய ஒவ்வொறு அசைவும் அவரின் இயக்கமே என உணரும்போது ஒருபோதும் குற்ற உணர்ச்சிகள் தோன்றாது..
மற்றவரை பார்த்து நம்மைப்போல்தான் அவரையும் ஆட்டிவைக்கிறார் என்ற பொதுஉணர்வுத்தோன்றி நேசம் பிறக்கும் ..
ஆகையால் விருப்பம் துன்பம் காமம் கோபம் பொறாமை என எது தோன்றினாலும் அதை விலக்க கூடாது ஒதுக்க கூடாது ..
இதைத்தந்தவர் இறைவன் அவர்நீதியில் பிழையே இருக்காது என்பதில் தெளிவு பெற்று அதை அனுபவித்தால் அவன் மாய மலங்களை அவர்த்துணையுடன் அவனே அறுப்பான் ...!இதுதான் நாம் எப்படி வாழ வேண்டுமென ஆடிக்காட்டிய தில்லை கூத்தப்பெருமான் திருநடனம்...
சித்தமலம் அறுத்து சிவமாக்கி எமை ஆண்ட சிவமே உம்மைப் போற்றி வணங்குகிறேன்...!

No comments:

Post a Comment