Wednesday, March 25, 2015

ஒரு சிறிய பயிற்சியை செய்துபாருங்கள். “எதையுமே யாரிடமிருந்தும் எதிர்பார்க்கமாட்டேன்” என்று ;

இன்றைய தினத்திலிருந்து ஒரு சிறிய பயிற்சியை செய்துபாருங்கள். “எதையுமே யாரிடமிருந்தும் எதிர்பார்க்கமாட்டேன்” என்று ;
.
அது எப்படி முடியும் ?
குழந்தைகள் படிப்பதை எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா?
.
மனைவியிடம் கணவன் எதையும் எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா?
என்று எண்ணுவீர்கள்.
எதிர்பார்ப்பதினால் மட்டும் அவர்கள் செயலில் தடை இருக்காது.. செய்து வருவதும் நிற்காது. அதற்கு முன்னே நீங்கள் செய்த செயலுக்கு தக்க விளைவாக உங்களுக்கு வரவேண்டியது வந்துகொண்டே தான் இருக்கும்.
.
.
எதிர்பார்ப்பில் நான்கு தன்மைகள் உண்டு
.
.அதாவது உங்களிடமிருந்து நான் எதயாவது எதிர்பார்த்தேனேயானால் அந்த தேவையில் ஒரு நீதியுணர்வு(Need),அதன் அளவு(Quantity), தன்மை (Quality), காலம் (Time) இந்த நான்கும் இருக்கின்றன.
.
.
யார் எதை எதிர்பார்த்தாலும், அல்லது பிறரிடமிருந்து கேட்டாலும் இந்த நான்கும் இருக்கும்.
.
.
எனவே எதிர்பார்ப்பதை விட்டுவிடுங்கள். எதிர்பார்ப்பதை விட்டுவிட்டால் ஏமாற்றமே இருக்காது..
.
மகிழ்ச்சியின்மைக்கும், முகம் சுழிப்பதற்கும் என்ன காரணமென்றால்... எதிர்பார்த்தலில் உண்டான ஏமாற்றமே. அது எப்படி வருகிறது எனில், கற்பனையாக ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கிறோம். எனக்கு இப்படி வரவேண்டும், அப்படி வரவேண்டும். இப்படி இருக்க வேண்டுமென்று.
.
.
எப்பொழுதுமே நமக்கு கிடைப்பது எல்லாம் நாம் செய்ததினுடைய விளைவாகத்தான். ஆகையால், நாம் என்ன செய்யவேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து, பிறருக்கு என்ன உதவி செய்யமுடியும் என்று யோசித்து செய்ய ஆரம்பித்தீர்களேயானால், பல பேருடைய நட்பையும் வலுப்படுத்திக்கொள்ளலாம்.
.
.
உங்களுடைய மனத்தின் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ளலாம்.பிறருக்கு மனப்பூர்வமாக எவ்வளவு உதவி செய்கிறோமோ அத்தனை அளவுக்கு மனப்பூரிப்பும், மன அமைதியும், ஆற்றலும் உண்டாகும்.
.
.
ஆகவே, முதலில் எதிர்பார்ப்பதைத் தவிருங்கள். இரண்டாவதாக நீங்கள் எப்பொழுதும் பிறருக்கு உதவி செய்ய தயாராக இருங்கள்.
.
.
பொருளைக்கொடுத்துத்தான் உதவி செய்யவேண்டுமென்பதில்லை. உங்களுக்கு எத்தகைய ஆற்றல் இருக்கிறதோ, அந்த ஆற்றலைக்கொண்டு, தேவை உள்ளவர்களுக்கு அறிவாலோ , பொருளாலோ பிறருக்கு என்ன செய்யமுடியுமென்று யோசித்து, அந்தந்த நேரத்தில் செய்ய மனப்பயிற்சி பெறுங்கள்.
.
.
காலையிலும், மாலையிலும் இந்த உலகம் சாமாதானமாக இருக்கட்டும் என்று வாழ்த்தமுடியாதா உங்களால்? அதை செய்யலாமே.! அம்மாதிரி எதை செய்யமுடியுமே அதை செய்துகொண்டே இருப்போமேயானால் மனதிற்கு ஒரு நிறைவு உண்டாகும்.
..
.
எப்போதும் பிறரிடம் எதிர்பார்ப்பதினாலேயே நாம் பிச்சைக்காரர்களாக மாறுகிறோம். முக்கியமாக நீங்கள் கவனித்துப்பார்த்தீர்களானால் எதிர்பார்ப்பவர்கள் எப்பொழுதும் ஏழ்மை நிலையில் தான் இருப்பார்கள்.
.
.
ஆகவே, எதிர்பார்ப்பதை விட்டுவிட்டு நாம் என்ன செய்யவேண்டும், நமது ஆற்றல், செல்வம், வசதி, செல்வாக்கு இவற்றைக்கொண்டு என்னென்ன வகையில் பிறருக்கு சேவை, உதவி செய்யமுடியும் என்று எண்ணுகிறபோது, நமக்கே நிறைய செல்வம் இருக்கிற மாதிரி நமது மனதிற்கு ஒரு நிறைவு உண்டாகும்.
..
.
இதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தால், மேலும் மேலும் ஆற்றல் வளரும், செல்வமும் வளரும், மகிழ்ச்சியும், நிறைவும் வளர்ந்துகொண்டே போகும். அப்போது மனதில் ஏழ்மை என்ற எண்ணம் இருக்கவே இருக்காது. இன்பமாக வாழலாம்

No comments:

Post a Comment