Friday, April 24, 2015

உலகில் மாறாத ஒரே விஷயம் மாற்றமே என்பது தான்

கீதையில் கண்ணனின் கூற்று உள்ளது உலகில் மாறாத ஒரே விஷயம் மாற்றமே என்பது தான் அது!!! அது மிக மிக உண்மையானது!!!

என் பத்து வயதுகளில் இருந்தாற்போல் இருபதுகளில் நான் இல்லை!!

இருபதுகளில் இருந்தாற்போல் முப்பதுகளிலும் , முப்பதுகளில் இருந்தாற்போல் நாற்பதுகளிலும் இல்லை!!

அதே போல் நாற்பதுகளில் இருந்தாற்போல் இன்று ஐம்பதுகளில் இல்லை!!

சில நல்ல மாற்றங்கள் உள்ளது!!! அல்லாத சிலதும் உள்ளது!!! ஆனாலும் மாற்றம் என்பது இருந்துகொண்டேதான் இருக்கிறது!!

நான் மாறவே மாட்டேன் என்று ஒரு புளியங்கொம்பைப் பற்றிக் கொண்டு தொங்குபவர்கள் கூட அந்தக் கொம்பு காலப் போக்கில் மாறி தடிமனாகவோ இளைத்தோ போவதைக் காணலாம்!!!

மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் எல்லாருமே கெட்டவர்கள் என்று நான் சொல்ல மாட்டேன்!!! ஆனால் சரியான பார்வைகள், புரிதல் இல்லாதவர்கள் என்றுதான் சொல்வேன்!!!

No comments:

Post a Comment