Tuesday, April 28, 2015

வீட்டில் யாராவது இறந்தால்……?

வீட்டில் யாராவது இறந்தால்……?
நம் மூதாதையர்களை நாம் முறைப்படி விண் செலுத்தப் பழகிக் கொள்ளவேண்டும்.
வீட்டில் யாராவது இறந்துவிட்டால் இந்தத் தியானத்தை எடுத்துக்கொண்டவர்கள் உடனே ஆத்ம சுத்தி செய்து, அந்த ஆத்மாவை விண் செலுத்திவிடலாம்.
ஆனால், நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்?
சுடுகாட்டுக்கு அந்த உடலைக் கொண்டு செல்கின்றோம். மந்திரத்தைச் சொன்னவுடன், கடைசியில் மோட்சம் போகும் என்று சொல்லி வைத்திருக்கின்றார்கள்.
சுட்ட சாம்பலைக் கங்கையில் கரைத்தால்
செய்த பாவமெல்லாம் கங்கையுடன் போய்விடும்.
கடலிலே போய்க் கலந்துவிடுகிறது என்கிறார்கள்.
“கங்கை” என்றால் எந்த கங்கை?
அந்த சப்தரிஷிகள் எடுத்துக் கொண்ட ஒளி கங்கையிலே கலக்கச் செய்யவேண்டும். நம் உணர்வின் சக்தி கொண்டுதான் மூதாதையர்களை விண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
இறந்தவர்களுடைய உயிராத்மாக்கள் இன்னொரு உடலுக்குள் மாசுபட்டிருக்கின்றது. அந்த பாவ வினைகளெல்லாம் நாம் உந்தித் தள்ளும் பொழுது அந்த ஒளிக் கடலிலே பட்டு அது பஸ்பமாகி அந்த கங்கையிலே கலக்கினால்தான் இந்த உயிராத்மா மோட்சம் அடையுமே தவிர, ஓடுகிற இந்த அழுக்குத் தண்ணீரிலே அவனிடம் காசைக் கொடுத்துவிட்டு கங்கையிலே கொண்டுபோய்க் கலக்கிவிட்டு மோட்ச தீபத்தை ஏற்றிவிட்டால் போகாது.
ஆற்றங்கரையிலெல்லாம் கொண்டு போய்விடுவோம். இவை எல்லாம் ஏமாற்று வேலைகள். இவ்வாறு நீங்கள் மோட்சத்திற்கு அனுப்ப முடியாது. காசைக் கொடுத்துவிட்டு ஏமாற வேண்டியதுதான். ஏழைகளுக்குக் காசைக் கொடுத்துவிட்டால் பாவம் போகும் என்பார்கள்.
மந்திரக்காரர்கள் மந்திரத்தைச் சொல்லும் பொழுது நாம் தாரை வார்த்துக் கொடுத்த மாதிரி, மந்திரத்தினுடைய நிலைகள் வேறெங்கும் போகாதாபடி அங்கேயே சிக்க வைத்து விடுகின்றோம்.
அந்த மந்திரத்தின் அடிப்படையில் நாம் செய்தால், அதன்பின் நம் தாய் தந்தையர் கனவில் வந்தால் இனி உன் குடும்பத்திற்குக் கஷ்டம்தான் என்பார்கள்.
அப்பா, அம்மா கனவில் வராமல் இருப்பதற்கு,
“நீ இந்த சாந்தி செய், அந்த சந்தி செய்,
இந்த நாடியைப் பார், இங்கே போ, அங்கே போ” என்பார்கள்.
அதற்கும் மீறி பாசத்தால் இன்னொரு உடலுக்குள் வந்தால் அங்கே வேலை செய்யும், இதற்காக வேண்டி பல ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார்கள்.
கங்கையில் கொண்டு போய்க் கரைத்துவிட்டு, சாப்பிடுவதற்கு ஆடும், மாடும், காய்கறியும் வாங்கிக் கொடுத்து மோட்சத்திற்கு அனுப்ப முடியாது. இருண்ட உலகத்திற்குள் மந்திரக்காரன் கையில் சிக்க வைத்து, மீண்டும் அவன் வேலைக்குப் பயன்படுத்துவதற்குக் கொடுக்கின்றோம்.
நாம் இந்த ஆத்ம சுத்தியைச் செய்துவிட்டு, உடலை விட்டுப் பிரிந்த இந்த உயிராத்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று சொல்லுங்கள். வேண்டிய லாபங்களைக் கொடுக்கும். ஆகையினால், அந்த ஒளிக் கடலிலே சேர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment