Friday, April 24, 2015

வேதம் என்றால் அறிவு

வேதம் என்னும் சமஸ்கிருத சொல்லின் அடிப்படைச் சொல்லுக்கு பல வகையில் விளக்கம் தரலாம். ஆனால் அதன் இறுதியான பொருள் ஒன்றே. வேதம் என்றால் அறிவு . வேதங்கள் கற்பிக்கும் அறிவே மூல
அறிவாகும்.கட்டுப்பட்ட நிலையிலுள்ள நம் அறிவு குறைபாடுகள் மிக்கது. கட்டுப்பட்ட ஆத்மாவுக்கும் , முக்தியடைந்த ஆத்மாவுக்கும் உள்ள நான்கு வித்யாசங்கள் என்னவென்றால்.

குறை - நிறைய தவறுகள் செய்பவன் . உதாரணமாக மகாத்மா காந்தி அவர்களை அவரின் உதவியாளர் நீங்கள் புது தில்லி போக வேண்டாம் என்று சொன்னார் அவர் அதை மறுத்து சென்றதால் சுட்டு கொல்லப்பட்டார். ஜனாதி பதி கென்னடி அவர்களும் அப்படியே . இப்படி பலர் தவறுகள் செய்துள்ளனர்.தவறு மனித இயல்பு இது கட்டுண்ட ஆன்மாவின் ஒரு குறை.

மாயையின் வசப்படுவது ஒரு குறை. மாயை என்றால் இல்லாத ஒன்றை இருபதாக எண்ணுவது. எல்லோரும் தங்கள் உடலை தானாக கருதுகின்றனர். நீங்கள் யார் என்று கேட்டால் நான் செல்வந்தன், அதிகாரி அது எது என்று சொல்கின்றனர். இவையெல்லாம் உடலை ஒட்டிய இனப்பாடுகள். அப்படி எண்ணுவது மாயை. நீங்கள் உங்கள் உடலல்ல.

மூன்றாவுது குறை, ஏமாற்ற்றும் இயல்பு. ஒருவன் முதல் தர முட்டாளாக இருந்தாலும் தன்னை அறிவாளி என்று காட்டிக்கொள்ள்வான். அவன் மாயையின் வசப்பட்டு நிறைய தவறுகளை செய்பவன்.

இறுதியாக நமது புலன்கள் குறைகளுல்லவை. நம் கண்களைப் பற்றி நாம் பெருமைபட்டுக் கொள்கின்றோம். கடவுளை காட்ட முடியுமா ? என்று பலர் சவால் விடுகிறார்கள். ஆனால் கடவுளை காணும் தகுதியுடைய கண்களை அவர்கள் பெற்றிருகிரார்களா ? அந்த கண்களில்லா விட்டால் உங்களால் காண முடியாது. திடீரென்று இந்த அரை இருட்டாகிவிட்டால் உங்கள் கைகளை கூட உங்களால் காண முடியாது. எனவே குறையுள்ள இந்த புலன்களின் உதவியாக அறிவை (வேதத்தை) எதிர்க்நோக்க முடியாது.கட்டுப்பட்ட வாழ்வின் குறைகளிடையே இருந்து ,கொண்டு முழுமையாக அறிவை நாம் யாருக்கும் தர முடியாது. எனவே வேதங்களை நாம் ஒப்புக்கொள்கின்றோம் !!

உதாரணமாக நம் நாட்டில் ஒருவர் நம்மிடம் நீ இப்படிதான் செய்ய வேண்டும் என்றால். நீ சொல்லுவது என்ன வேத வாக்கா என்று கேட்கின்றோம். கவனமாக அது எப்படி ஏற்பட்டுள்ளது என்று கவனித்தால் வேதம் சொல்லும் உண்மைகள் நமக்கு புரியும்.

வேதங்கள் மனித அறிவின் தொகுப்புகள் அல்ல. வேத ஞானம் ஆன்மிக உலகிலிருந்து, அதாவுது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் இருந்து வருவதாகும். வேதத்திற்கு மற்றொரு பெயர் " ஸ்ருதி " , ஸ்ருதி என்றால் கேள்வியில் இருந்து வரும் அறிவு. அது ஆராய்ந்தறியும் அறிவல்ல. " ஸ்ருதி " தாயை போன்றது. நாம் நம் தாயிடம் இருந்து எவ்வளவோ பெறுகின்றோம் . வேதங்கள் தாய் என கருதுகின்றோம் நாம்.

வேத ஞானம் " சப்தப்ப்ரமானம் " என்று அழைக்கபடுகின்றது. அதன் மற்றொரு பொருள் தான் " ஸ்ருதி

No comments:

Post a Comment