Thursday, April 30, 2015

லஹரி என்றால் என்ன?

லஹரி என்றால் என்ன?
கைலாயம் சென்ற ஆதிசங்கரர் சிவதரிசனம் செய்தார்.அப்போது சிவன் சங்கரரிடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் ஒரு மந்திர சுவடியையும் கொடுத்தார்.அந்த லிங்கத்தில் ஒன்றே காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சந்திரமவுலீஸ்வரர் என்னும் பெயரில் வழிபாட்டில் இருக்கிறது.மற்ற நான்கும் கேதார்நாத், சிருங்கேரி,சிதம்பரம்,நேபாளம் ஆகிய தலங்களில் இருக்கின்றன.மந்திரச் சுவடியில் நூறு ஸ்லோகங்கள் இருந்தன.சவுந்தர்ய லஹரி என்னும் இந்நூலுக்கு அழகு அலைகள் என்று பொருள்.அம்பிகையின் அழகை வர்ணிக்கும் இதனை பக்தியுடன் படிப்பவர்களுக்கு அவளது பேரருள் கிடைக்கும்.

No comments:

Post a Comment