Friday, April 24, 2015

மாதங்களில் சிறந்தது மார்கழி

ஆண்டுக்குரிய 12 மாதங்களையும், வாரத்துக் குரிய ஏழு (7) நாட்களையும், 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆண்டுகளின் பெயர் துவக்கத்திலிருந்து மீண்டும் வரும்செயல் திட்டத்தையும் வகுத்தவர்கள் இம்மண்ணுலகின் இயற்கையின் விதி களை ஆராய்ந்த பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படி கருப்புக்களும் ஆவார்கள். இவர்களின் கருத்துபடி மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம் தான்.

எந்தநல்ல காரியத்தை துவக்க வேண்டுமென்றாலும் இந்த மார்கழியில்தான் துவக்கவேண்டும். அதாவது திருமணம், கால்கோள்விழா, குருகுலக் கல்வி, வழிபாட்டு நிலைய பூசைகள்..... முதலிய அனைத்தும் மார்கழி மாதத்தில்தான் செய்யவேண்டும் என்பது தெய்வீகச் செந்தமிழ் மொழி இந்து மதத்தில் சட்ட பூர்வமான அதிகாரப் பூர்வமான விதியாகும்.

"பீடுநிறைந்த மாதம் = பெருமைகள் மிகுந்த அரியன செய்தற்குரிய மாதம்; வாழ் வியல் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் உகந்தமாதம். 'பீடமாதம்' = அருட்பீடம், குருபீடம், கருப்பீடம், கருமப்பீடம், திருப்பீடம்...... முதலிய பீடங்களை அமைப்பதற்குரிய குலவளர்மாதம் = அருளுலகுக்கு மிகமிக சிறந்த மாதம்."

அனைத்து வகையான கலை வல்லார்களும் இந்த ஒருதிங்கட்குரிய முப்பது (30) நாட்களும் அதிகாலையில் தங்களுடைய கலைகளைப் பயிற்சிசெய்தால் நல்லது. அவர்கள் ஆண்டு முழுதுமுள்ள 11 மாதங்களில் பயிற்சி செய்யா விட்டாலும் பாதகமில்லை..... என்று இப்படி குருவாக்கு, குருவாக்கியம், குருவாசகம், குரு பாரம்பரியம் முதலியவை தெளிவாக கூறுகின்றன.

இதனைப்புரிந்து இனிமேலாவது நம்மவர்கள் மார்கழி மாதத்தை சிறப்பாகக் பயன்படுத்த வேண்டும் . ஞாலகுரு சித்தர் கருவூறார் , ஞானாச்சாரியார் 'அன்பு சித்தர்'

No comments:

Post a Comment