Tuesday, May 12, 2015

அசைவமாக உள்ள மிருகங்கள் ஏன் சைவ உணவு உண்ணும் மாடு, ஆடு, மான் போன்ற‌ விலங்குகளையே அடித்து உண்ணுகின்றன?

அசைவமாக உள்ள மிருகங்கள் ஏன் சைவ உணவு உண்ணும் மாடு, ஆடு, மான் போன்ற‌ விலங்குகளையே அடித்து உண்ணுகின்றன? ஏன் ஒரு சிங்கம் மற்றொரு சிங்கத்தின் சதையை உண்பதில்லை?
அசைவ உணவு சாப்பிடும் மிருகங்களுக்கு உடலில் புரோட்டின் உற்பத்திக்கான‌ அமினோ அமிலங்கள் தானாகச் சுரப்பதில்லை. எனவே தங்கள் புரோட்டின் தேவைக்காக சைவ உணவு உண்ணும் விலங்குகளை அடித்துத் தின்கின்றன.
மனிதனுக்கும், மாட்டிற்கும், ஆட்டிற்கும் 22 அமினோ அமிலங்களில் 13 அமிலங்கள் அவர் அவர் உடலிலேயே உற்பத்தி ஆகிவிடுகின்றன‌.மீதம் உள்ள 9 அமிலங்களைத்தான் வெளியில் இருந்து பெற வேண்டும்.எல்லா வகைப் பருப்புக்களும் மனிதன் எடுத்துக்கொண்டால் மிகவும் அவசியமான அமினோ அமிலங்கள் கிடைத்துவிடும்.அதற்கும் மேல் மாட்டுப் பாலும், முட்டையும் போதுமானது.அதற்கு மேல் உயிர்வதை செய்யப்பட வேண்டுவது இல்லை.
எல்லோரும் சைவமாக மாறிவிட்டால் உணவுத் தட்டுப்பாடு வந்துவிடும் என்று கூறுவது ஒரு வெற்று வாதமே!
வர்த்தக ரீதியில் கொல்லப்படுவதற்காகவே வளர்க்கப்படும் பன்றி, ஆடு, மாடு, கோழி ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் தாவர உணவு, மனிதனுக்குத் திருப்பி விடப்பட்டால் உலகின் எந்தப்பகுதியிலுமே உணவுப்பஞ்சம் இருக்காது என்பதே உண்மை.
அசைவ உணவில் நாக்கு ருசி கண்டுவிட்டபின் அதனை விட முடியாமல்தான் பெரும்பாலோர் இருக்கின்றனர்.
'அஹிம்சோ பரமோ தர்மஹ' என்பதை அனைவரும் அறிந்துள்ளனர்.

2 comments:

  1. All people can't eat grass, straws and husks of grains, vegetable wastes. But the animals can eat and maintain the natural food cycle

    ReplyDelete
  2. All people can't eat grass, straws and husks of grains, vegetable wastes. But the animals can eat and maintain the natural food cycle

    ReplyDelete