Thursday, July 23, 2015

அவதாரமும் காரணமும் ....

அவதாரமும் காரணமும் ....
ஜெய விஜயன் என இரண்டு பேர் ஸ்ரீமன் நாராயணனை காவல் காக்கும் தொழிலில் உள்ளவர்கள். யாராக இருந்தாலும், இவர்கள் அனுமதி கொடுத்தால்தான் ஸ்ரீமன் நாராயணனை பார்க்க இயலும். அப்படி ஒரு சமயம், சனகாதி முனிவர்கள், நான்கு பேரும் நாராயணனை பார்க்க வரும்போது, இவர்கள் தடுத்து விடுகிறார்கள்.
சனகாதி முனிவர்கள் நான்கு பேரும், எப்போது வேண்டுமானாலும் இறைவனை தரிசிக்க வரலாம் என்ற வரத்தை பெற்றவர்கள். அந்த நேரம் அதை மறந்ததால், சனகாதி முனிவர்கள், இந்த ஜெயவிஜயர்கள் இரண்டு பேருக்கும் சாபம் கொடுத்துவிடுகிறார்கள்.
அதாவது , மூன்று ஜன்மா பூமியில் வசித்து பிறகு இங்கு வரவும் என அந்த சாபம் ஆகும் .
ஜெயவிஜயர்கள், பரந்தாமனிடம் இதை சொல்லி கேட்டார்கள். முனிவர்களின் சாபம் உலகுக்கு நல்லதே ஆகும். அதன்படிதான் அனைத்தும். நீங்கள் அவர்களை தடுத்தது , தவறுதானே , என்றார்.
ஜெயவிஜயர்கள் இருவரும், நாராயணனிடம் கேட்டுக்கொண்டார்கள், மூன்று ஜன்மா என்பது அதிகமாக இருக்கிறது. நீங்கள் எங்களுடனே இருந்தால்தான் இது சித்தி ஆகும் என்று சொல்ல, சுவாமியும் அப்படியே ஆகட்டும் என்று கூறுகிறார்.
அதன்படி, முதல் ஜன்மா, ஜெயவிஜயர்கள்
ஹிரண்யாக்ஷன்,ஹிரண்யகசிபு என்று அண்ணன் தம்பியாக பிறக்கிறார்கள்.
ஹிரண்யாக்ஷன் மூலம் - வராக அவதாரம் எடுத்து பூமியை கடலுக்கு அடியில் இருந்து எடுத்து வெளியே வருகிறார் சுவாமி.
ஹிரண்யகசிபுவை அழித்து, அவனது மகனாகிய ப்ரஹ்லாதனுக்கு காட்சி கொடுத்து நரசிம்ம அவதாரம் எடுத்தார்.
2 வது ஜன்மா - ராவணன், கும்பகர்ணன் என இருவரும் அண்ணன் தம்பியாக பிறக்கிறார்கள்.= ராமாவதாரம்
3 வது ஜன்மா சிசுபாலன் , தந்தவக்த்ரன் என இருவரும் பிறக்கிறார்கள்.=கிருஷ்ணாவதாரம்
ஒன்று க்ருத யுகம், 2.த்ரேதா யுகம் 3,த்வாபர யுகம்
ஆக மூன்று தடவை இதுபோல் வந்து அந்த சாபத்தை நீக்கிகொள்கிரார்கள்.

1 comment:

  1. நல்ல செய்தி... அறியத் தந்தீர்கள்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete