Tuesday, September 22, 2015

நாம் உண்ணும் உணவை பொருத்தே நமது குணம் இருக்கும்

நாம் உண்ணும் உணவை பொருத்தே நமது குணம் இருக்கும். காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் அதிகம் இருக்கும். காய்கறிகள் அதிகம் சாப்பிட்டால் உடல் நலம் பெறும். விலங்கு வகைகளை சாப்பிட்டால் விலங்கின் குணம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏன் சாப்பிடும் பதார்த்தங்களை சமைப்பவரின் குணம், பரிமாறுபவர்களின் குணங்களும் கூட சாப்பிடுபவர்களுக்கு வரும் என்று நமது பெரியோர்கள் கூறியுள்ளனர்.
சைவமோ, அசைவமோ எது யாருக்கு பிடிக்கிறதோ அதை சாப்பிடும் உரிமை அவரவருக்கு உண்டு.
ஒருவரின் உணவுபழக்கத்தை பற்றிய விமர்சன பேச்சு நாகரிகமற்றது என்றாலும் நல்லதை சொல்லும் தார்மீக உரிமையில் சொல்கிறேன். மனிதன் ஒரு தாவர விலங்கு. மனித உடலின் அமைப்பு சைவ உணவுகளை உண்ணும்படியாகத்தான் உடலின் அமைப்பு இயற்கையால் வடிவமைக்கப்பட்டிருகிறது. சைவ உணவுகள் எளிதில் ஜீரணமாக கூடியவை.
அசைவ உணவுகள் அவ்வளவு எளிதில் ஜீரணமாகதவை. நமது உடலில் ஜீரண சக்தி அதிகமாக அதிகமாக உடல் உபாதைகள் இருக்காது. ஜீரண சக்தி குறைந்தால் உடல் உபாதைகள் ஏற்படும் இதுதான் அடிப்படை உண்மை.
எனவே நமது உடலுக்கு எது நல்லதோ அதை உண்பதே சிறப்பு..
மேலும் மனம் ஒருமைப்படுத்தவும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் சைவ உணவே மிகச்சிறந்ததாகும்.

No comments:

Post a Comment