Monday, November 30, 2015

பொருள்

மும்மலம்:- ஆணவ மலம், கர்ம மலம், மாயா மலம்.
----பொருள்--------------------------------------------------------
(கீழே உள்ளவற்றை வேறு எந்த சித்தாந்ததுடனோ, வேறு யாருடைய கருத்துடனோ ஒப்பிடவேண்டாம். இருப்பதை இருக்கும்வண்ணம் எதனுடனும் ஒப்பிடாமல் படிக்கவும்.)
மலம் என்றால் அழுக்கு (அ) தேவையற்றது என்று
பொருள்.
மனிதன் தன் சுயவடிவான இறைநிலையை உணர மூன்று மலங்கள் மனிதனுக்கு தடையாய் உள்ளது.
அவை,
ஆணவம் (நான் என்னும் அஹங்காரம்),
கர்மம் (செயல்களை நான் செய்கிறேன் என்னும் பிரமை),
மாயை (இல்லாததை இருப்பதாய் பாவனை செய்வது).
--------------********--------------
இம்மலங்கள் யாவை, அவைகளினின்று விலகுவது எங்கனம் என காண்போம்!!
ஆணவ மலம்:-
-------------------------------
“நான்” என்னும் சிந்தனையே ஆணவம் எனப்படும். வடமொழியில் இதனை “அஹங்காரம்” என்பார்கள் “அஹம்” என்றால் “நான்” என்பது பொருள். “அநாதி அவித்யா அஹங்காரம்” என்று வசிஷ்டர் கூறுகிறார்.
அதாவது துவக்கமே அற்ற அறியாமை தான் “நான்” என்பது, என்று வாசிஷ்டத்தில் மகரிஷி வசிஷ்டர் கூறுகிறார்.
பிரபஞ்சம் சிருஷ்டி துவங்கியபோது தோன்றிய முதல் அறியாமையே இந்த “நான்” என்றும் கூறுகிறார்.
இந்த நான் என்பது என்ன என்பதனை புரிந்துகொண்டால், ஆணவ மலத்தை கடந்துவிடலாம்.
நாம் “நான்” என்று கூறும்போது சரியாகத்தான் கூறுகிறோம்.
ஆனால் அதன் பொருளைத்தான் தவறாக புரிந்து கொள்கிறோம்.
“நான்” என்னும் சொல்லை எப்பொழுது நாம் நம் உடலோடு சேர்த்து புரிந்துகொள்கிறோமோ அப்பொழுதே அது ஆணவமலமாக மாறுகிறது.
ஆனால் “நான்” என்பதோ பெயரும் குணமும் அற்ற “பிரம்மத்தை” குறிப்பதாகும்.
“இறைவனுக்கு மிகவும் பொருத்தமான பெயர் “நான்” என்று ரமணர் கூறுகிறார்.
ஒரு மின்விசிறி, ஒரு கிரைண்டர், ஒரு மின் அடுப்பு, ஒரு வாஷிங்மிஷீன் இவை நான்கும் உள்ளது.
இதில் மின்விசிறி என்ன சொல்லும்? “நான் சுற்றுகிறேன். நான் காற்றை வரவழைக்கிறேன்.” என்று சொல்லும்.
“நான் அரிசியை மாவாக அரைக்கிறேன்” என்று கிரைண்டரும்,
“நான் தண்ணீரை கொதிக்கச் செய்கிறேன்” என்று மின் அடுப்பும்,
“நான் துணிகளை துவைக்கிறேன்” என்று வாஷிங்மஷீனும் சொல்வதாக கற்பனை செய்துகொள்வோம்.
இதில் சற்றே கூர்ந்து நோக்கினால், இவைகள் நான்குமே உபயோகிக்கப்படும் திறன் நிறைந்த ஜடப்பொருள்கள் மட்டுமே.
இவைகளுக்கு உயிராக விளங்குவது மின்சக்தி ஆகும். மின்விசிறியில் சுழலும் ஆற்றல் சூன்யமாக (அ) மறைந்து உள்ளது. மின்சாரமே அதனை சுழலசெய்கிறது. அதே போலத்தான் மற்றவையிலும்.
இங்கு “நான் சுற்றுகிறேன்.
நான் காற்றை வரவழைக்கிறேன்.” என்று விசிறி கூறினால் அதில் “நான்” என்னும் சொல் ஜடப்பொருளான மின்விசிறியை குறிக்காது. அதற்கு உயிரான மின்சாரத்தை தான் குறிக்கும். அதேபோலத்தான் மற்றவையிலும்.
இப்பொழுது நம் கதைக்கு வருவோம்.
நம் சரீரம் எதனை எத்தனையோ ஆற்றல்களை கொண்டுள்ளது. ஆனாலும் நம் சரீரமும் அந்த மின்விசிறியும் ஒன்றுதான்.
ஆற்றல் சூன்யமாக (அ) வெளிப்படாமல் உள்ள நிலையில் நம் உடலும் ஜடம் தான்.
இறந்த பிரேதத்தைப் போல. . . .
நம் உடலுக்கு இயக்க சக்தியை தருவது இப்பிரபஞ்சம் ஆகும். எந்த பிரபஞ்ச சக்தி நக்ஷத்திரங்களை அந்தரத்தில் நிற்கச்செய்கிறதோ, எந்த பிரபஞ்ச சக்தி சூரியனை பிரகாசிக்கசெய்கிறதோ, எந்த பிரபஞ்ச சக்தி நிலவுக்கு குளிர்மையை தருகிறதோ, எந்த பிரபஞ்ச சக்தி புல்பூண்டு முதலியவை செழிக்கசெய்கிறதோ, அதே பிரபஞ்ச சக்திதான் இந்த உடலையும் இயக்குகிறது.
சரீரம் வெறும் ஜடம். இறந்த சவத்திற்கு சமம். அதற்கு உயிராய் இருந்து இயக்க ஆற்றலை தருவது பிரபஞ்ச சக்தியாகும். ஆகையால் இங்கு “நான்” என்பது பிரபஞ்ச சக்தியைத்தான் குறிக்கும்.
நான் ஓடினேன் என்று கூறும்போது, “பிரபஞ்ச சக்தி இவ்வுடலை ஓடச்செய்கிறது” என்றுதான் பொருள்.
அதேபோலத்தான் நம் செயல்கள் அனைத்துமே. “எப்பொழுது நாம் “நான்” என்னும் பதத்தை நம் சரீரமாக கற்பனை செய்கிறோமோ அப்பொழுது அது “ஆணவ மலம்” எனப்படும்.
எப்பொழுது “நான்” என்பது அந்த பிரபஞ்ச சக்தியை குறிக்கும் என்று உணருகிறோமோ அப்பொழுது அது “பிரஹ்ம ஞானாமாக” மிளிரும்”
ஜடமான சரீரத்தை “நான்” என்று எண்ணும் புரிதல் அற்ற சிந்தனைக்குப் பெயர்தான் “ஜீவன்” என்பதும்.
தவிர உயிர், ஜீவன், ஆத்மா என்று தனியே உடலில் எங்கும் இல்லை. மனதின் கற்பனை பாத்திரம் தான் “ஜீவன்”.
உண்மையில் அப்படி அல்ல நம்மை இயக்கும் ப்ரபஞ்ச சக்தியான ப்ரும்மமே அந்த ஜீவன்.
இல்லாத ஜீவனை இருப்பதாக எண்ணி, அந்த “ஜீவனே நான்” என்று புரிதல் இல்லாமல் கற்பனை செய்வதே “ஆணவ மலம்”.
பிரபஞ்சம் இயக்கினால் சரீரம் இயங்கும். இல்லாவிட்டால் செத்துப்போனதாக கருதப்படும். அவ்வளவுதான். இதில் உயிர், ஜீவன், ஆத்மா என்பவை மனதின் கற்பனை.
நான் என்று கூறுவது தவறல்ல. அது பிரபஞ்சத்தின் சொல். ஆனால் “நானை” உடலாக எண்ணுவது தான் தவறு.
ஜீவோ ப்ரும்ஹைவ நா பர: ...........
கர்ம மலம்:-
--------------------
வடமொழியில் “கர்மா” என்றால் செயல்கள் என்று  
பொருள்

No comments:

Post a Comment