Friday, December 11, 2015

கனவில் யானை வந்தால் என்ன பலன்?

கனவில் யானை வந்தால் என்ன பலன்?
கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் மட்டுமே உள்ளது. நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது. கனவில் யானை வந்தால் அரசாங்க உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும். யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். பிரிந்த கணவன் மனைவி இடையே உறவு ஏற்படும். இளம் தலைமுறையாக இருந்தால் திருமணம் நடக்கும். விநாயகப்பெருமானை வணங்கிவிட்டு தூங்கசெல்லுங்கள். விநாயகர் அகவலை காலை, மாலையில் பாராயணம் செய்யுங்கள். ஓம் சக்திவிநாயகநம என்ற நாமத்தை குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 108 முறை சொல்லுங்கள். நிச்சயம் நல்லபலன் உண்டாகும். கனவில் யானையைப் பார்ப்பது செல்வவளத்துக்கும் அறிகுறியே.

No comments:

Post a Comment