Wednesday, January 20, 2016

மனக்குழப்பம் அகல எளிய பரிகாரம் !!

மனக்குழப்பம் அகல எளிய பரிகாரம் !!

ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து அல்லது பகை கிரஹத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும். அவ்வாறு அமைந்தவர்கள், பௌர்ணமி அன்று சந்திரனை தரிசித்து வணங்கி, 'ஓம் சந்திராய நமஹ' என்று ஒன்பது முறை சொல்வது நல்லது.
மேலும், சந்திரனுக்குரிய பச்சரிசியில் சாதம் வடித்து, தானும் சாப்பிட்டு, தன்னைச் சார்ந்தவர்களும், தான் வளர்க்கும் விலங்குகளுக்கும் அளித்து சாப்பிடச் சொல்வது நல்லது. திங்கட்கிழமை தோறும் செய்யலாம்!.
கடக ராசியில் பிறந்தவர்கள், இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள், திங்கட்கிழமை பிறந்தவர்கள் ஆகியோர் முத்து மாலை, மற்றும் முத்து மோதிரம் அணியலாம். இதனால், சந்திர பகவான் அருளும், மனச்சாந்தியும் கிட்டும்!

No comments:

Post a Comment