Friday, April 22, 2016

எதற்காக பால், தேன், சந்தனம் போன்ற அபிஷேகங்கள் கோவில்களில் நடைபெறுகிறது?

எதற்காக பால், தேன், சந்தனம் போன்ற அபிஷேகங்கள் கோவில்களில் நடைபெறுகிறது? இதற்கு ஏதாவது அறிவியல் அல்லது மெய்ஞானக் காரணங்கள் உள்ளதா?
----------------------------------------------------------------------------------
காரண காரியங்கள் இல்லாமல் எமது சநாதன தர்மத்தில் எந்த ஒரு வழிபாட்டு முறையும் சொல்லப்படுவதில்லை. அதில் ஒன்றுதான் பால், தேன், அரிசி மாவு, திருநீர், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம், எழுமிச்சை, மஞ்சல், வில்வம், போன்ற அபிஷேகங்கள். நாம் முதலில் இதற்கான அறிவியல் காரணங்களை ஆராய்வோம்.
காந்த அலைகளும் கோவில்களும் (Magnetic Waves):
--------------------------------------------------------------------------
அனைத்து இந்து தர்ம கோவில்களும் வட மற்றும் தென் துருவம் சேரும் இடத்திலேயே அமைந்திருக்கும். குறிப்பாக கர்ப கிரகம் இந்த திசையில்தான் அமைந்திருக்கும். மூலவரை பிரதிஷ்ட்டை பண்ணும் போது செப்பு (Copper) தகட்டின் மேல்தான் பிரதிஷ்ட்டை செய்வர். இந்த செப்பு தகடானது காந்த அலைகளை பிரதிபளிக்க வல்லது. மூலவரானவர் வட மற்ரும் தென் துருவம் சேரும் இடத்தில் அமையப் பெற்றிருப்பதால் காந்த அலைகள் சூழ்ந்து இருக்கும். அவ்வாரு தன் மீது படும் காந்த அலைகளை செப்பானது தன்னை சூழ்ந்திருக்கும் பக்தர்கள் மீது பிரதிபளிக்கிறது. பக்தர்களுக்கு ஒருவித நல்ல அலைகள் (Positive energy)
கிடைக்கிறது. செப்பு பிரதிபளிக்கும் தன்மை உடையது என்பதர்க்கு அறிவியல் ஆதாரம் வேண்டுவோர்:http://www.physlink.com/Education/AskExperts/ae512.cfm
இதற்கும் அபிஷேகத்திற்கும் என்ன சம்பந்தம்:
--------------------------------------------------------------------
தமிழகத்திலும் ஒட்டு மொத்த இந்தியாவையும் எடுத்துக் கொண்டால் பொதுவாக அனைத்துமே உஷ்ண பிரதேசங்கள்தான். பொதுவாக நமது உடல் சூட்டை தனிப்பதற்கு குளிர் பிரதேசங்களுக்கும். நீர் நிலகளுக்கும் செல்வதுண்டு. ஆனால் அதை அடிக்கடி செய்ய முடியாது. அதற்கு பதிலாகத்தான் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது. இங்கே அபிஷேகம் செய்யப்படும் பொருள்கள் அனைத்து குளிர்ச்சியை தரும் பொருள்களே. ஒவ்வொரு முறை மூலவர் முன் செய்யப்படும் அபிஷேகத்தின் குளிர்ச்சி சூழ்ந்திருக்கும் பக்தர்கள் மீது செப்பு மூலம் பாய்கிறது. பக்தர்களின் உடலும் மனமும் குளிர்ச்சி அடைகிறது.
மெய்ஞானம்:
-------------------
இந்துக்கள் அனைவரும் இயற்கையை வழிபடக் கூடியவர்கள். இந்த ஒட்டு மொத்த இயற்கையையும் இறைவனே படைத்தான் என்பதில் தீர்க்கமாக நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே இறைவன் படைத்த இயற்கையை தாம் பயன்படுத்துவதற்கு முன்பு இறைவனுக்கு கொடுப்பது வளக்கம். இதை இன்றைக்கு நேற்றைக்கு அல்ல காலம் காலமாக செய்கிறார்கள்.
---------------------------------------------------------------------------------
சற்று சிந்தித்துப் பாருங்கள் மக்களே!!!!!! நாம் யார் சோற்றிலும் மண்ணை அள்ளிப் போட்டு பால் அபிஷேகம் பண்ணவில்லை. நமத்கு உழைப்பையே இறவனுக்கு படைக்கிறோம். அந்த நேரத்தில் குழந்தை பசியால் அழுதால் குழந்தைக்குதான் அந்த பாலை நாம் கொடுப்போம். இது சில தற்குறிகளுக்கு புரியப் போவதில்லை. அறிவியலின் அடிசுவடு கூட படாத அந்த காலத்தில் நம் முன்னோர்கள் செப்பை குறித்தும் காந்த அலைகள் குறித்து சிந்தித்து உள்ளார்கள் எனில் இது சாதாரண விசயமா?

No comments:

Post a Comment