Friday, April 22, 2016

குரு

குரு
குரு என்பவர், மந்திரத்தின் சூட்சமம் அறிந்தவர், ஒவ்வொரு மந்திரத்தின் அதிர்வும் எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது, அவரது அனுபவத்தில் தெரியும்.
சிலர் ஞானிகளும், முனிவர்களும், ரிஷிகளும், குருவானவர்களும் மந்திரத்தை உருவாக்கியவர்கள் தங்களது புலமையினால் மந்திர சாஸ்திரத்தை உண்டாக்கியவர்கள் என்று நினைக்கிறார்கள்
இது முற்றிலும் தவறு.
மந்திரம் நாற்காலி அல்ல உருவாக்குவதற்கு. அது கிணறும் அல்ல பத்துபேரின் கூட்டு முயற்சியால் தோண்டுவதற்கு.
தானாக தோன்றிய சுயம்பு. எப்போதுமே பிரபஞ்ச வெளியில் இருந்து கொண்டே இருக்கும். சாஸ்வதம் ரிஷிகளும், ஞானிகளும் அந்த சாஸ்வதத்தை காதுகளால் மட்டும் கேட்கவில்லை. கண்களாலும் பார்த்தார்கள். அதனால் தான், அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா என்று பெயர். அதாவது அவர்கள் மந்திரங்களை நேருக்கு நேராக நமக்கு பார்த்து சொன்னவர்கள். அந்த மந்திரங்கள் ஏடுகளில் எழுதப்பட்டது மிகவும் சொற்பம். குரு பரம்பரை வழியாக வாழையடி வாழை என வந்து கொண்டு இருப்பதே அதாவது எழுதப்படாத மந்திரங்களே மிக அதிகம்.
பரம்பரையாக குரு உபதேசம் பெற்று வருகின்ற குருமார்கள், இந்த மந்திரர்களை இன்னாருக்கு இன்னது என்று அடையாளம் கண்டு கொடுப்பதில் வல்லவர்கள். அவர்களுக்கு மட்டும் அந்த திறன் எப்படி கிடைக்கிறது? என்று யோசிப்பதில் பொருள் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு மனிதனும் மூன்று வகையான உடம்பை பெற்றிருக்கிறான் ஒன்று உணவுகளால் ஆன சரீரம். இரண்டாவது உணர்வுகளால் ஆன மனது. மூன்றாவது அதிர்வுகளால் ஆன வெளிச்சம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உடம்பை சுற்றி இயற்கை ஒரு ஒளிவட்டத்தை கொடுத்திருக்கிறது. அது வெண்மை, நீலம், சிவப்பு மற்றும் மஞ்சள் என்று பலவகை வண்ணங்களால் ஆனது. ஒவ்வொரு வண்ணமும் குறிப்பிட்ட அந்த மனிதனின் எண்ணங்களை, ஆத்மாவின் தன்மையை அடையாளப்படுத்துவது ஆகும்.
ஊதா நிறத்தில், ஒருவனை சுற்றி ஒளிவட்டம் இருந்தால் அவன் கடினமான சித்தம் கொண்டவனாக இருப்பான்
வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிவட்டம் இருந்தால் அவன் மலர்ச்சியானவனாக இருப்பான். இந்த வட்டத்தை என்னவென்று பார்க்கும் ஆற்றல் யோகிகளுக்கும், ஞானிகளுக்கும், இயற்கையாகவே தெய்வீக சக்திகள் நிறைந்த ஒருசில மனிதருக்கும் உண்டு
மந்திரங்கள் என்பது இரண்டு அல்லது மூன்று எழுத்தில் முடிந்து விடும் சக்தி மிகுந்த ஒசைகளாகும். இந்த ஓசைகள் இல்லாமல் உலகம் இல்லை. இந்த ஓசைகளுக்குள் தான் நமக்கு வரம் தரும் சக்தி மறைந்து கிடக்கிறது. நமக்கான பீஜ மந்திரத்தை குருமூலம் உபதேசம் பெற்று மீண்டும் மீண்டும் அந்த மந்திரத்தை நாம் சொல்கிற போது, அந்த மந்திர அதிர்வு நமது உடம்பிற்குள் மறைந்து கிடக்கும் சக்தி மையங்களை விழிப்படையச்செய்கிறது. அப்படி விழிப்படைந்த சக்தி மையங்கள் பீஜ மந்திரங்களின் அதிர்வுகளோடு கலக்கும் போது பிரபஞ்ச ஆற்றலை மிக சுலபமாக ஈர்க்கிறது அதன் பிறகு நாம் நினைத்தது நடக்கிறது.
தாகம் தீர்க்கும் நதி எதிரே வருகிறது. குளிர்ச்சியை தரும் தென்றல் உங்கள் வீட்டு வாசலில் வீசுகிறது. வாசனை நிறைந்த மல்லிகை பூ உங்கள் பந்தலில் படர்ந்திருக்கிறது. சந்தன குழம்பை வாரி இறைக்கும் வண்ண நிலவு நீலவானில் பவனி வருகிறது. நீங்கள் மட்டும் ஏன் கதவை சாற்றி நாலு சுவற்றிற்குள் உங்களை சிறைப்படுத்தி கொள்ள வேண்டும்.
ஆகவே தகுந்த குருவை தேடி அவரிடம் திட்ஷை பெற்று உபதேசமந்திரம் வாங்கி தினம் தினம் பீஜ மந்திரத்துடன் கூடிய உபதேச மந்திரத்தை தினம் தினம் ஜெபம் செய்து முக்திக்கு வழி தேடுவோம்

No comments:

Post a Comment