Wednesday, June 1, 2016

மௌனமொழி மூலம் வாழ்க்கையில் வெற்றிக்கு வித்திடுவோம்.

இந்த பூவுலகில் பிறந்த எல்லா உயிர்க்கும் இறப்பு மட்டுமே நிரந்தரம். பிறப்பு, பிறந்து நன்கு வளர்ந்த பின்தான் பிறப்பின் இரகசியம் நமக்கு தெரியும். ஆனால் பிறந்தபின் நாம் நிச்சயம் ஒருநாள் இறந்துவிடுவோம் என்பதை வாழும்போது உணர்வோம். இந்த இரகசிய பிறப்பை அமைதியாக ரசித்து வாழ்பவர்கள் நம்மில் எத்தனை பேர்.
ஒரு குறுகியகால வாழ்க்கையில் இன்பத்தையும் துன் பத்தையும் அனுபவிக்காதவர்கள் இந்த உலகத்தில் இரு க்கமாட்டார்கள் என்றால் அதில் மாற்றுக் கருத்துக்களு க்கு இடமில்லை. எல்லாம் இருந்தும் சிலருக்கு வாழ தெரியாது. சிலருக்கு இருப்பதை கொண்டு வாழதெரி யாது. இன்னும் பலர் குறுகிய வட்டத்துக்குள் வாழ்க்கை யை வட்டமிட்டுகொள்வார்கள்.
ஆனாலும் ஒரு சிலர், தமது வாழ்க்கை போராட்டத் துக்குள் மற்றவர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து அவர்களுடைய வாழ்க்கையையும் சீரழித்துவிடு வார்கள். அந்த வாழ்க்கை போராட்டமாக மாறுவது ஏன்? விட்டுக்கொடுத்தல், பக்குவம், புரிதல், மரியாதை, அறிவு ஆகியன இன்மையால் வாழ்க்கையே போராட்டமாகிவிடுகின்றது.
அன்பை கொடுப்பதற்கும் அன்பை பெறுவதற்கும் எம்முடைய வார்த்தை பயன்பாடு மிகவும் முக்கியமானதும் இன்றியமையாததாகவும் இருத்தல் வேண்டும். அதுதான் வள்ளுவரே! 'தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' என்றும் 'யாகாவ ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' . சொல்லியுள்ளார் .
விட்டுக்கொடுத்தல், பக்குவம், புரிதல், மரியாதை, அறிவு இவற்றை கடைபிடித்தால் அன்புக்கு பஞ்சமே இருக்காது. அன்பு இருந்தால் இந்த உலகத்தில் நிம்மதியாக இருந்துவிடலாம்.
அன்பை வார்த்தைகள் மூலம் மட்டுமல்ல மௌனத்தின் ஊடாகவும் வெளிப்படுத்தலாம். வார்த்தைகளில்லாமல் நம்முடைய ஆழ்மனதின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் மௌனம்;. உள்மனதோடு பேசுதல், வார்த்தைகள் இல்லாமல் பிரார்த்தனை செய்தல், இயற்கையோடு இணைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் நாம் மௌனமாக இருக்கிறோம்.
மௌனமும் ஆன்மீகமும் மிகவும் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. ஆன்மீகத்தின் ஓர் அடையாளமான தியானம் செய்வதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்துகிறோம். பரபரப்பு நிறைந்த இன்றைய உலகில் அவ்வப்போது ஒருநாள் மௌன விரதத்தைக் கடைப்பிடிப்போரையும் காண்கின்றோம். இதனால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி ஏற்படுவதோடு மருத்துவ அடிப்படையிலும் உடல் உறுப்புக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன.
என்றாலும், எல்லா நேரங்களிலும் மௌனத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க முடியாது. தேவைப்படும் நேரத்தில் தேவையானவற்றைத் தெளிவாகவும் உறுதியாகவும் பேசுவது அவசியமாகிறது. அதிக ஒலியுடன் ஆவேசமாகப் பேசுவதால் உடலின் சக்தி வீணாவதுடன், அப்படிப் பேசுபவர்கள் மீதான மற்றவர்களின் பார்வையும் தவறானதாக நேரிடும். எனவே, அளவுடன் தேவையானவற்றைப் பேசி நல்ல மனோநிலையை அடைவோம். மௌனமொழி மூலம் வாழ்க்கையில் வெற்றிக்கு வித்திடுவோம்.

No comments:

Post a Comment