Monday, July 4, 2016

மகோற்சவம் பற்றிய விளக்கம்

மகோற்சவம் பற்றிய விளக்கம் 
மகோற்சவம் என்பது பல தத்துவமான
கருத்துக்களைத்
தெளிவுபடுத்துவதாயுள்ளது.
நல்லஞானத்தையும் போக மோட்சத்தையும்
ஆன்மாக்களுக்குத் அளிப்பது மகோற்சவம் ஆகும்.
உற்சவ ஆரம்பம் கொடியேற்றம் வரையான
கிரியைகள் படைத்தலையும்,
வாகனத்திருவிழா காத்தலையும் இரதோற்சவம்
அழித்தலையும், மௌன உற்சவம்
மறைத்தலையும், தீர்த்தஉற்றசவம் அருளலையும்
குறிப்பதாக நடாத்தப்படுகின்றது.
இப்படியான ஆலய உற்சவங்களில் பங்குபற்றுபவர்கள்,
வழிபடுபவர்களுக்கும் தீட்சை பெறா
விட்டாலும் தீட்சை பெற்ற பலன் கிட்டியதாக ஆகமங்கள் உணர்த்துகின்றன. ஆலயங்களில்
நடைபெறும் நித்திய பூசையில் உண்டாகும் குற்றங்களையும் நைமித்திய பூசைகள்
நீக்குவனவாக உள்ளன.
நைமித்திய உற்சவங்களில் சிறந்தது கொடியேற்றம் ஆகும். கொடிமரத்தின் மேல் மூன்று
குறுக்குத்தண்டுகள் இச்சாசக்தியாகவும், கிரியாசக்தியாகவும், ஞானாசக்தியாகவும்,
இரண்டு குறுக்குத்தண்டுகள் சூரியனையும், சந்திரனையும் கொடியேற்றும் கயிறு
அனுக்கிரக சக்தியாகவும், கொடி வாயுவாகவும், கொடியிலுள்ள மையப்படம்
அவ்வக்கோயில் மூலமூர்த்திகளின் சக்தியையும் குறிக்கும், சைவாகமங்களில்- மூன்று
பொருட்களான பதி,பசு,பாசம் என்பவற்றில் பசு எவ்வாறு பாசத்தினின்று விலகி
இறைவனைப் பற்றிக் கொள்வது என்பதையும் விளக்கி நிற்கின்றது.
கொடிமரம் பதியையும், கொடிச்சீலை பசுவையும் தர்பைக் கயிறு பாசத்தையும்
குறிக்கின்றது. கொடிக்கம்பத்தில் காணப்படும் முப்பத்திமூன்று கணுக்கள் மானுட
சரீரத்திலேயுள்ள முள்ளந்தண்டில் முப்பத்திமூன்று எலும்புக்கோர்வைகளை
குறிக்கின்றது.
உற்சவம் என்னும் சொல் விழா என்று பொருள்படும் இச்சொல்லுக்கு உத்தமமான யாகம் என்றும்
மேலான ஐந்தொழில்கள் என்றும் உட்பொருள் கூறுவார். உற்சவம் மூன்று வகைப்படுகின்றது
நித்திய பூசையினிறுதியில் செய்யப்படுவது நித்தியோற்சவம், வருடம் தோறும் குறித்த
ஒரு காலத்தில் வருவது நைமித்திய உற்சவம், இட பூர்த்திகளின் பொருட்டு செய்யப்படுவது
காமிய உற்சவம் நைமித்திய உற்சவங்களில் சிறந்தது பிரமோற்சவம் ஆகும். நித்தியக்
கிரியைகளின் போது ஏற்படும் குற்றம் குறைகளை பிராயச்சித்தமாக அமைவது இந்த
மஹோற்சவம் ஆகும்.
மஹோற்சவ காலத்தை நிர்ணயிக்கும் வகை நான்கு கௌரவம், சாந்திரம்,நஷ்சத்திரம்,சாவனம்
என்பனவே அவை ஆகும். மஹோற்சவமானது கொடியேற்றம் முதல் தீர்த்தம் ஈறாக யாகம் பலி
என்பவற்றுடன் செய்யப்படுவது. ஐந்தொழில் விளக்கமாக இது அமைகின்றது. இதனை சாகல்யம்
என்ற பெயராலும் ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. கொடித்தம்பம் நந்தி பலிபீடம் என்பவற்றை
அடுத்து மனிதனின் முள்ளந்தண்டை நிகர்த்து நிமிர்ந்து நிற்க்கும்.
மூங்கில்,கருங்காலி,வில்வம்,தேவதாரு,பலாசு, தென்னை முதலிய மரங்களில்
ஒன்றுகொடிமரமாக பயன்படுத்தப்பட்டு இருக்கும் உலோகத்தகடுகளால் போர்த்தப்பட்டு மேலே
கொடிச்சீலை விரிந்து நிற்கத்தக்க அமைப்புக்களையும் கொண்டதாக உருவாக்க்பட்டிருக்கும்.
ஆன்மாவைப் பதிந்து நின்ற பாசமலங்கள்,பக்குவமடைந்து திருவருட் துணையால்
இறைவனை சேரும் போது வலிகுன்றி வாளாவிருக்கும் இதையே இங்கிருக்கும்
தர்ப்பக்கயிறு காட்டுகின்றது.
மஹோற்சவ ஆரம்பதினமாகிய துவரரோகண தினத்திற்கு (கொடியேற்ற நாளுக்கு) முதல்
நாள் மாலையிலேயே சில பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பமாகிவிடும். ஆலயம் அமைந்துள்ள
கிராமத்திலுள்ள தீய சக்திகள், துட்டத்தன்மைகள் முதலியவற்றால் பெருவிழாவிற்கு
இடையூறு ஏற்படாமல் மங்கலமுண்டாகும் படி காவற்தெய்மாகிய வைரவப்பெருமானுக்கு
விசேட பூஜை ஓமம், பலி என்பன செய்தலே கிராம சாந்தி ஆகும். இதனைப்புரிந்து
கொள்ளாத பலர் மஹோற்சவத்துக்கு முதல் நாள் பேய் பிசாசுகளைக் கட்டிவைப்பதாகவும் ,
கொடியிறக்கநாளில் அவிழ்த்து விடுவதாகவும் கூறுவர். காவலை உறுதிப்படுத்தி
வைரவரிடம் வேண்டுதல் நடத்துவது போலவே மஹோற்சவ இறுதியில் வைரவரை
மகிழ்விக்கும் வகையில் வைரவர் மடை நடத்தப்படுகின்றது.
நிலத்திலுள்ள குற்றங்குறைகளை நீக்குவதற்காகச் செய்யப்படுவது வாஸ்து சாந்தி
என்னுங்கிரியை ஆகும். பூமிக்கு அதிபதி பிரம்மா , மழைக்கடவுள் இந்திரன் ,இவர்களை
மகிழ்வித்து வழிபாடியியற்றுவது வாஸ்து சாந்தியில் இடம் பெறுகின்றது. ரஷா என்பது
காப்பு காவலுக்கு கட்டப்படுவது காப்புக்கட்டுதல் எனவும் கூறுவர். ஸ்நபன கும்ப
பூஜைகள் துவரரோகணத்துகுரிய கொடிப்படம், தம்பம், அஸ்த்திர தேவர், நந்தி, பலிபீடம்
முதலிய வற்றுக்கும் மூலமூர்த்திக்கும் விசேஷ அபிஷேகங்கள் செய்வதற்காக ஸ்நபன
கும்பங்கள் மண்டபத்திலே வைக்கப்படும்.
சுவாலித்து எரியும் அக்கினியின் தோற்றத்தில் அமைக்கப்பட்ட தேரானது அழித்தலை
குறிப்பது. தேரின் பாகங்கள் பிரபஞ்சத் தோற்றத்தையும், அதன் பீடம் இருதயத்தையும் குறிப்பன
அங்கு இறைவன் வீற்றிருந்ததும் தேர் ஓடுகின்றது. வாழ்க்கைத் தேர் சிறப்பாக ஓடுவதற்கு
நமது இருதய பீடத்திலே இறைவனை எப்போதும் எழுந்தருள வைத்திருக்க வேண்டும்.
மறைத்தலாகிய தொழிலிலைக்குறிப்பது. சூர்ணோற்சவம். ஆன்மாக்களை ஆணவாதி
மலங்களில் அழுந்தச் செய்வது அகவாயிலாக இறைவயுணர்வு பெறச் செய்வது ஆண்டவனின்
அருள் நோக்கம் ஆகும். திருப் பொற்ச்சுண்ண மிடித்து, தீர்த்தமாடிய பின் சுவாமியை யாக
வாசலில் கொண்டு வந்து யாக தரிசனம் செய்வித்துப் பூர்ணாகுதி வழங்குவர்.
பத்தாம் நாள் இரவு சாயங்காலப் பூசைகள் முடிந்து உற்சவ மூர்த்திக்கு விசேட பூசைகள்
நடைபெற்ற பின் சுவாமியை எழுந்தருளச் செய்து ஸ்தம்ப மண்டபத்திற்குக் கொண்டுவருவர்.
நிதானமாகக் கொடிக்கயிற்றை அவிழ்த்துக் கொடியைச் சகல வாத்தியங்களுடனும் இறக்கிக்
கொடித்தம்பக் கூர்ச்சத்தை மூலமூர்த்தியிடமும், கொடிப்படத்தை நந்தியிடம் சமர்பித்து
நீராஐனம் செய்யப்படும்
பொதுவாக எல்லாக்கோயில்களிலும் பெருவிழாக்கள் பத்துநாட்கள் நடைபெறுவது வழக்கம் .
ஆனால் சில திருக்கோவில்களில் பத்துநாட்களுக்கும் மேற்பட்டும் திருவிழாக்கள்
நடைபெறுகின்றன. அவைகளுக்கும் விதிகள் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment